திங்கள், ஜூலை 31, 2017

பகவன் புத்தர் எவற்றை போதித்தார்


அபி (Ambedkar and Buddha Intellectuals) இரண்டவது ஒரு தலைப்பு கொடுத்தது "பகவன் புத்தர் எவற்றை போதித்தார்" பாபா சாகிப் அவர்களின் புத்தரும் அவர் தம்மமும் என்ற நூலில் பகுதி (நூல்) 3. ஜூலை 16 அன்று என்னுரை

பகவன் புத்தர் எவற்றை போதித்தார் What the Buddha Taught என்ற வினாவிற்கு விளக்கமளிப்பதற்கு முன், பகவன் புத்தர் எவ்வாறு போதித்தார் என்ற வினாவோடு துவங்குகிறார் அறிவர் அண்ணல் அம்பேத்கர்.   
Moggallana மெக்கலன்னா (Accountant) என்பவர் பகவன் புத்தரிடம் ஒரு வினாவை எழுப்புகிறார். நாங்கள் வைதீகத்தில் (Step by Step Training) படி படியாக பயிற்சி அளிப்பது போன்று நீங்கள் பயிற்சி அளிக்கிறீர்களா? என்று. படி படியாகதான் பயிற்சியளிக்கப்படுகிறது என்பதனை விளக்குகிறார் பகவன் புத்தர். 5 விதமான பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரு பயிற்சியில் தேர்ச்சி பெற்ற பிறகு தான் அடுத்த பயிற்சியளிக்கப்படுகிறது. 
01உணர்வு கட்டுப்பாடு : நல்லவனாய் இரு,  கட்டமை உணர்வுக்கு கட்டுப்பட்டு இரு, தீய செயல்களின் தீமையை உணர்ந்து நல் ஒழுக்க செயல்களில் திளைத்து இருங்கள் என்று பயிற்சி அளிக்கப்படுகிறது.
02. புலன் கட்டுப்பாடு  ஓசையை செவியினால் கேட்டும் பொழுதும்( 5வது புலன் (அ) அறிவு), நிறத்தையும் தோற்றத்தையும் கண்ணால் காணும் பொழுதும் (4வது புலன் (அ) அறிவு), வாசனை மற்றும் நறுமணத்தை மூக்கின் நாசி துவாரத்தின் மூலம் உணரும் பொழுதும் (3வது புலன் (அ) அறிவு), உணவின்  சுவையை நாவினால் உணரும் பொழுதும் (2வது புலன் (அ) அறிவு), தொடு உணர்வை உடலால் இஸ்பர்சிக்கும் பொழுதும் (1வது புலன் (அ) அறிவு) தோற்ற மயக்கம் கொள்ளாமல் உள்ளதை உள்ளபடி உணறும் பயிற்சி அளிக்கப்படுகிறது.  
03. உணவு கட்டுப்பாடு அளவாய் உண்ணுங்கள் ஆர்வமாய் உண்ணுங்கள் உடலினை உறுதிசெய்ய உண்ணுங்கள் ஆடம்பரத்திற்க்காக விளம்பரத்திற்க்காக உணவை எடுத்துக்கொள்ளாதீர்கள் என்று பயிற்சி அளிக்கப்படுகிறது.
04. சுய கட்டுப்பாடு : பகலில் விழிப்புடன் இருங்கள், இரவில் சிங்கம் போன்று வலது புறம் படுத்து, ஒருக்களித்து, கால் மேல் கால் போட்டு தன் உணர்வுடன் முக்குளியுங்கள். காலையில் மன மாசுகளை நீக்குங்கள் என்று பயிற்சி அளிக்கப்படுகிறது. 
05.   இந்த நான்கையும் சேர்ந்த தியானம் தனிமையான இடம் ஒன்றை தேர்ந்தெடுத்து, அமர்ந்து கால்களை தாமரை அமர்வில் அமர்ந்து, உடலினை நிமிர்த்து, மேற்சொன்ன நான்கையும் ஒரு முகப்படடுத்தும்  பயிற்சி அளிக்கப்படுகிறது.          
மெக்கலன்னா இரண்டாவது வினாவை பகவன் புத்தரிடம் எழுப்புகிறார். உங்களால் பயிற்சியளிக்கப்பட்ட அனைவரும் நிப்பாணம் அடைந்தனரா என்று. மெக்கலன்னா மற்றும் பகவன் புத்தரின் வினா விடைகள். 
பகவன் புத்தர் : ஒரு சிலர் நிப்பாணத்தை அடைந்தனர். பெருபாலானோர் அடையவில்லை.  
மெக்கலன்னா : ஒரே பயிற்சியை அளிக்கும் போது சிலர் மட்டும் நிப்பாணம் அடைகின்றனர் பெரும்பாலானோர் நிப்பாணம் அடைவதில்லை அது ஏன்?
பகவன் புத்தர் : இதற்கு பதில் அளிப்பதற்கு முன் என் வினாக்களுக்கு பதிலுரையுங்கள். ராஜாகிரகத்திற்க்கு செல்ல வழி தெரியுமா?
மெக்கலன்னா  ராஜாகிரகத்திற்க்கு செல்ல வழி நன்றாக  தெரியும்.  
பகவன் புத்தர் : ஒருவர் உங்களிடம் ராஜாகிரகத்திற்க்கு செல்ல வழி கேட்கிறார். நீங்கள் சொல்லிய வழியில் செல்லாமல் திசைமாறி வேறு பக்கம் சென்றுவிடுகிறார். இன்னொருவர் வருகிறார் அவரும் ராஜாகிரகத்திற்க்கு செல்ல வழி கேட்கிறார் நீங்கள் சொல்லிய வழியில் செல்கிறார். இவ்விரண்டு நபர்களில் யார் ராஜாகிருகம்  அடைவார்?
மெக்கலன்னா : இரண்டாவது நபர்.
பகவன் புத்தர் : இருவருக்கும் ஒரே வழியை காண்பித்தும் ஏன் முதலில் சென்றவர் அந்த இடத்தை அடையவில்லை
மெக்கலன்னாஅவர் சரியான வழியையில் செல்லாதது என் தவறு இல்லை.
பகவன் புத்தர் : மெக்கலன்னா புத்தர் என்பவர் ததாகர், மார்கா தத்தா, வழியை காண்பிப்பவர். பின்பற்றுவது அவரவர் விருப்பம் என்று என்றுரைத்தார்.
உலகில் எந்த ஒரு மத போதகரும் சொல்லாத சொல்லை சொல்லியிருக்கிறார் பகவன் புத்தர். இதனை கூர்ந்து கவனித்த அறிவர் உலகில் உள்ள அனைத்து மதங்களையும் இரண்டாக பிரிக்கிறார். ஒன்று வெளிப்படுத்தபட்ட மதம் (Reveled Religion) மற்றோன்று இயற்கையான மதம் (Natural Religion). 

வெளிப்படுத்தப்பட்ட மதம் இயற்கையான மதம் வேறுபாடுகள் 
வெளிப்படுத்தப்பட்ட மதங்கள் : வைதிகம், கிறித்துவம், இஸ்ஸாம் இவைகள் வெளிப்படுத்தப்பட்ட மதங்கள்.
இயற்கையான மதம் : பௌத்தம் .  
வெளிப்படுத்தப்பட்ட மதம் என்பது கடவுளால் வெளிபடுத்தப்பட்டது. இம்மதங்களுக்கு அடிப்படையாக கடவுள். உலகை படைத்தது இக்கடவுள், உயிரினங்களை படைத்ததும் இக்கடவுள்கள், இயக்க விதிகளையும் படைத்தது இக்கடவுள்கள் தான். எனவே மனிதர்கள் இக்கடவுளை வணங்க வேண்டும். இக்கடவுள் அருளிய பகவத் கீதையை, அல்லது குரானை அல்லது பைபிளை நம்ப வேண்டும் இல்லை எனில் அவர்களுக்கு சொர்க்கம் என்பது இல்லை நரகம் மட்டுமே. 
இயற்கையான மதம் : பௌத்தத்தில் கடவுள் இல்லை, தம்மை கடவுளின் மகன் என்றோ, இறை தூதர் என்றோ பகவன் புத்தர் சொல்லவில்லை அவ்வாறு பிறர் சொல்வதையும் மறுத்து இருக்கிறார். பௌத்தத்தில் எங்கும் தம்மை  முன்னிலை படுத்திக்கொள்ளவில்லை. தமக்கு பின் தன் மகன் ராகுலன் அல்லது தன்னுடன் பெரும்பகுதியை கழித்த பிக்கு அனந்தரையோ முன்னிறுத்தாமல் தம்மத்தையே முன்னிறுத்தியுள்ளார்.
நிப்பானத்தை அடைய தம்மை நம்பவேண்டும், தாம் போதித்தவையை ஏற்கவேண்டும் என்று எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. மேலும் உலகில் வேறு எந்த மத நிறுவனரும் செய்யாத/சொல்லாத ஒன்றை பகவன் புத்தர் அளித்துள்ளார்.  அது சிந்தனை சுதந்திரம்.
பகவன் புத்தர் கேஸபுத்த நகரத்திர்க்கு சென்றார். அங்கு வசித்து வந்த கலாம என்னும் மக்கள் மிக பயனுள்ள ஒரு வினாவை எழுப்பினர். புத்தரே நீங்கள் வருவதற்கு முன் ஒரு ஆன்மிக ஆசிரியர் வந்திருந்தார். அவர் சொல்வது தான் உண்மை என்றும் இவருக்கு முன் வந்து கற்பித்த ஆன்மிக அறிஞரின் கருத்துக்கள் தவறு என்றும் உரைத்தார். இவ்வாறு இங்கு வரும் ஒவ்வொருவரும் தாம் கூறுவது தான் உண்மை எனவே அதனை பின்பற்ற வேண்டும் என்றுரைக்கின்றனர். யாருடைய போதனை சரியானது? எந்த போதனையை நாங்கள் பின்பற்றுவது? என்று வினா எழுப்பினர்.    
பகவன் புத்தர் அம்மக்களுக்கு ஒரு சூத்திரத்தையே (Formula) கொடுத்துவிட்டார். பௌத்தத்தில் இதனை காலம சுத்த என்றழைக்கப்படுகிறது. பழைய நூல்கள் இப்படிப் பகர்ந்தன என்பதால் எதையும் நம்பிவிடாதே, பெருநாளாகப் பின்பற்றப்படுவது, வழக்கமாக இருந்து வருவது என்பதால் எதையும் நம்பிவிடாதே, பெரும்பான்மையினர் பின்பற்றுகின்றனர், இருப்பவர் பலரும் ஏற்றுக் கொண்டனர் என்பதால் எதையும் நம்பிவிடாதே, ஆண்டில் முதிர்ந்தவர், அழகியர், கற்றவர், இனிய பேச்சாளர் என்பதற்காக எதையும் நம்பிவிடாதே, ஒருவர் சொன்னதை ஆராய்ந்துபார், அறிவினால் உணர்வினால் சரிஎனில் அதனால் உனக்கும் அனைவருக்கும் நன்மை உண்டெனில் நம்ப வேண்டும் 
பகவன் புத்தர் எவற்றை போதித்தார் என்று வினா எழுப்பினால் ௦1. புத்தர் அகிம்சையை போதித்தார் ௦2. அன்பை போதித்தார் ௦3. அமைதியை போதித்தார் ௦4.சமத்துவத்தை போதித்தார் ௦5.சகோதரத்தை போதித்தார் ௦6.சுதந்திரத்தை போதித்தார் என்றுரைக்கின்றனர். இது தவறான பதில் என்று சொல்லிவிடவும் முடியாது. அப்படியெனில் புத்தர் எவற்றை போதித்தார்?.

ஒரு முறை பிக்கு  மாலுங்க்ய (Malunkya) தியானத்தில் இருக்கும் பொழுது பல சந்தேகங்கள்/வினாக்கள்  மனதில் எழுந்தது. உடனே பகவன் புத்தரிடம் சென்று அந்த வினாக்களுக்கான விளக்கம் பெற சென்றார். (01-02) உலகம் நிலையானதா? நிலையற்றதா? (02-04) உலகம் வரையர்க்கு உட்பட்டதா? வரையர்க்கு உட்படாததா? (Infinite) (05-06 ) மரணத்திற்கு பின் புத்தர் தொடர்ந்து இருக்கிறாரா? இல்லையா? (07-08) மரணத்திற்கு பின் புத்தர் இருந்தும் இல்லாமலும் இருக்கிறாரா? இருப்பதும்மில்லை இல்லாமலும் இல்லையா? (09-10)ஆன்மாவும் உடலும் ஒன்றா அல்லது வெவேறானதா?

பிக்கு  மாலுங்க்ய அவரின் இந்த ஒரு வினாக்களுக்கு பகவன் புத்தர் பதில் அளிக்கவில்லை. பிக்கு  மாலுங்க்ய கோபம் கொண்டு அங்கிருந்து சென்று மற்ற பிக்குகளிடம் சொன்னார் புத்தர் என் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். வினாக்களுக்கு விடை தெரிந்தால் விடை சொல்லவேண்டும், இல்லை எனில் எனக்கு பதில் தெரியாது என்று பதில் சொல்லவேண்டும். இல்லை என்றால் நான் சீவரத்தை நீக்கி, பிக்கு சங்கத்தில் இருந்து விலக்குவேன் என்றார். பகவன் புத்தர் பிக்கு  மாலுங்க்ய அவரை அழைத்து நான் உன் வினாக்களுக்கு விளக்கம் அளிக்கிறேன் வந்து சங்கத்தில் சேர் என்று சொன்னேனா? பதில் சொல்லவில்லை என்றல் சங்கத்தில் இருந்து விலகிடலாம் என்று சொன்னேனா? இந்த வினாக்கள் தம்மத்தோடு தொடர்பு இருக்கிறதா? இந்த வினாக்கள் துன்பத்தை போக்குமா? என்றார். இதில் இருந்து தெரிவது பகவன் புத்தர் போதித்தது தம்மம்.  

தம்மம் என்பது எது என்பதனை அறிவர் ஆறு வகையாக பிரித்து அளித்துள்ளார். 01. வாழ்வில் தூய்மையை கடைபிடிப்பது தம்மம் 02. வாழ்வில் நிறைவடைவது  தம்மம் 03. Nibbanam 04. ஆவா அறுத்தல் தம்மம் 05. கூட்டு பொருள்கள் நிலையற்றவை என்று உணர்தல் தம்மம் 06. கம்மா விதியை அறிந்து உணர்வது தம்மம். 

(5/6) கூட்டு பொருள்கள் நிலையற்றவை என்று உணர்தல் தம்மம்
கூட்டு பொருள் என்பதன் அறிவியல் பெயர் சேர்மம் (Bond). கூட்டு/சேர்மம் என்றால் என்ன?  ஒன்றுக்கு மேற்பட்டதனிமங்கள்  பிணைந்து இருப்பது சேர்மம். தனிமம் என்றால் என்ன? ஒரு சேர்மத்தை பகுத்து/பிரித்து வரும் பொழுது, எப்பொழுது அந்த சேர்மத்தை மேலும் பகுக்கவோ பிரிக்கவோ முடியாதோ அந்த நிலையில் உள்ள பொருள் தனிமம்.  அதாவது சேர்மங்களை பிரிக்க முடியும் தனிமங்களை பிரிக்க முடியாது. இதுவரை கண்டறியப்பட்ட  தனிமங்களின் எண்ணிக்கை 118 (Periodical Table - ஆவர்த்தன விதிகள்). 

தனிமங்கள் ஒன்றினையும் பொது  சேர்மங்கள் ஆகிறது. சேர்மங்கள் பிரியும் பொழுது தனிமம் ஆகிறது என்பது Morden Science. பகவான் புத்தரின் கூட்டு பொருள்கள் நிலையற்றவை என்ற Classical Science உடன் ஒப்பிடும் பொழுது இரண்டும் வேறுபாடு கொண்டதாக இல்லை. 

பகவான் புத்தரின் கோட்பாட்டை அசங்கர் விளக்குகிறார். எல்லா பொருள்களும், உயிருள்ளவை உயிர் அற்றவை அனைத்தும் காரண காரியத்தால் தோன்றுகிறது. தோன்றியவை அனைத்தும் மறைபவை. கூட்டு கலைந்தால் அழிவு உறுதி.

சேர்மங்கள் பிரிந்தால் தனிமம் ஆகிறது / கூட்டு கலைந்தால் அழிவு உறுதி என்பதுடன் பொருந்திவருகிறது.

உலகில் உள்ள அனைத்தையும் நான்கு பொருள்களாக பிரிக்கலாம். நிலம், நீர், காற்று, நெருப்பு   என்பதனையே 01. Solid Element திடப்பொருள்  02. Water Element திரவ பொருள்  03. Air Element  வாயுப்பொருள்  04. Fire Element தீ பொருள் என்று படித்து அறிந்து இருக்கிறோம். 
01. Solid Element  திடப்பொருள்  என்பது வடிவம் மற்றும் அளவை (Shape and Size) கொண்டது. மனித உடலில் உள்ள திடப்பொருள்கள் மொத்தம் 18. அவை 01. தலை முடி 02. தலை முடியை தவிர்த்து உடலில் உள்ள முடி  03. நகங்கள்  04. தோல் 05. திசுப்படலம் 06.  தசை 07. பற்கள்  08.  நரம்புகள் 09. எலும்புகள் 10. மச்சை (எலும்பு) 11. நுரையீரல் 12. மண்ணீரல்  13. கல்லீரல் 14. இதயம் 15. பெருங்குடல் 16. சிறுங்குடல்  17.சிறுநீரகம் 18. செரிமாணம் ஆகாத உணவு 
02. Water Element - திரவ பொருள் என்பது பள்ளத்தை/தாழ்வை நோக்கி ஓடக்கூடியது, உறிஞ்சக்கூடியது. மனித உடலில் உள்ள திரவப்பொருள்கள் மொத்தம் 12. அவை 01.வியர்வை 02. கண்ணீர்  03. சளி   04. உமிழ்நீர் 05. இரத்தம் 06. சீழ் 07. கொழுப்பு 08. எண்ணெய்ப் பசை  09. கூட்டு உராய்வு திரவம் 10. பித்த நீர் 11.கபம்  12. சிறுநீர்
03. Air Element  வாயுப்பொருள் கற்று அல்லது வாய்வு என்பது வீசும் தன்மை உள்ளது.  அடர்த்தி மிகுந்த காற்று கீழ் நோக்கி வீசும் அடர்த்தி குறைந்த காற்று மேல் நோக்கி வீசும். 01. உடல் மீது காற்று மேல்நோக்கி  வீசும் பொழுது தூக்கம் அல்லது மயக்கம் வருகிறது. 02.வயிற்றில் காற்று செல்லும் பொழுது வயிற்று வலி அல்லது வயிற்று பிரச்சனைகள் உருவாகிறது. 03. குடல்களில் காற்று செல்லும் பொழுது வாந்தி மற்றும் குடல் பிரச்சனைகள் உருவாகிறது. 04. மூக்கின் நாசி துவாரத்தின் மூலம் கற்று செல்லும் பொழுது மனிதன் உயிர் வாழ்கிறான் 05.உடலுக்குள் கற்று செல்லும் பொழுது உடல் முழுவதும் உணவையும், இரத்தத்தையும் கொண்டுசெல்ல உதவுகிறது.   
04. Fire Element தீ பொருள் என்பது இந்த மூன்று பொருள்களின் (திட, திரவ, வாய்வு) இயக்கத்தால் உருவாவது. 
அதாவது திடப்பொருள் பற்கள், எலும்பு திரவ பொருள் கண்ணீர், இரத்தம், வாயுப்பொருள் கற்று இவை அனைத்துமே சேர்மம் தான். மனிதன் என்பவன் 6 தனிமங்களின் சேர்மம் என்று உணரலாம். 
திரவ பொருள் - Oxygen (65%) Hydrogen (10%)  Nitrogen (3%)
திடப்பொருள் - Carbon (18%) Calcium (2%) Phosphorus (1%) 
எல்லாம் நிலையற்றவை என்பது பகவன் புத்தரின் கோட்பாடு. மனிதன் வாழ்வின் எந்த ஒரு இரண்டு கட்டத்திலும் ஒரே மாதிரியாக இருந்தது இல்லை. ஏன் என்றால் தொடர்ந்து வளர்ந்தும் மாறிக்கொண்டும் இருக்கிறான். தாயின் கருவில் ஒரு சிறு புழுவாக சென்று 40 வாரங்கள் கடந்து குழந்தையாக வருகிறது. பிறந்த குழந்தைக்கு 300 எலும்புகள் உண்டு இது வளர்ந்த பிறகு 206 ஆகா குறைகிறது.  பிறக்கும் போது இல்லாத பற்கள் வளர்ந்த பிறகு வருகிறது. வளர்ந்த குழந்தையாக இருக்கும் போது இல்லாத மீசையும் தாடியும் இளைஞாக உடன் வருகிறது.  இளைஞாக இருக்கும் பொழுது உள்ள வேகமும் துடிப்பும் வயது முதிர்ந்த பின் இல்லாமல் போகிறது, தசைகள் சுருங்கி போகிறது. ஒரு முறை சுவாச காற்றை உள்ளிழுத்து வெளியிடுவதற்குள் உடலும் மனமும் பல மாற்றங்களை கொள்கிறது.                      

சரி இந்த அறிவியலுக்கும் தம்மத்திற்கும் என்ன தொடர்பு. உலகில் நிலையானது என்று எதுவும் இல்லை. அனைத்தும் நிலையற்றவை. நிலையற்றவை மீது பற்று கொண்டால் அது துன்பத்தையே அளிக்கும். எனவே பற்று அறுப்பது  துன்பத்தை போக்கும் அறியாமையை விலக்கும்.  

(6/6)  கம்மா விதியை அறிந்து உணர்வது தம்மம் 
பௌத்தம் நியதி என்பதை நியமங்கள் என்றுரைக்கிறது. கோள்களின் இயக்கங்கள், பருவ நிலை மாற்றங்கள், விதைகள் மரமாய் வளர்வதும், மரங்கள் கனிகளை தருவதும், கனிகள் விதைகளை தருவதும் ஒழுக்க நியதி. இந்த ஒழுக்க நியதியை வெளிப்படுத்தப்பட்ட மதம் கடவுளுடன் இணைத்து விடுகிறது. உலகை படைத்தது கடவுள், உயிரினங்களை படைத்தது கடவுள், இந்த நியதிகளை உருவாக்கியது கடவுள் என்றுரைக்கின்றனர்.

இந்த நியதிகளை உருவாக்கியது கடவுள் என்றால் இந்த உலகில் ஒழுக்க சீரழிவுகள் மிகுந்து இருப்பது ஏன்? இதற்கு அவர்களின் பதில் அது கடவுளின் தவறு இல்லை, அது இயற்க்கையின் தவறு. ஒழுக்க நியதிகளை உருவாக்கிய கடவுள் ஒழுக்க சீரழிவுகளை போக்க வேண்டிய கடமை உள்ளவர். இந்த சீரழிவுகளை சரி செய்யாத பொறுப்பு அற்றவராக கடவுள் இருப்பது ஏன்?

பகவன் புத்தர் இதற்கு விளக்கம் அளிக்கிறார். பிரபஞ்சத்தின் ஒழுக்க நியதியை நிர்வகிப்பது கடவுள் இல்லை. அது கம்ம நியதி.  கம்மம் என்றால் என்ன? கம்மம் என்பது மனித செயல்கள். எல்லா செயல்களும் கம்மா ஆவதில்லை. விருப்பத்தோடு நோக்கத்தோடு செய்யும் செயல்களே கம்மம் ஆகும். தற்செயலாக, நோக்கம் இன்றி செய்யப்படும் செயல்கள் கம்மம் ஆவதில்லை. ஜேதவனத்தில் பார்வையில்லாத பிக்கு மழைக்காலத்தில் நடந்து சென்ற போழுது பல பூச்சிகள் இறந்து போய் விட்டது. இதனை பின் அறிந்த பிக்குகள் பகவன் புத்தரிடம் முறையிடுகின்றனர். பகவன் புத்தர் பிக்குவிற்கு கொல்வது அவரின் நோக்கமல்ல மேலும் தாம் நடப்பதால் அவ்வுயிர்கள் இறப்பதையும் அறிந்துணரவில்லை. எனவே நோக்கமெல்லாம் செய்யும் செயல் கம்மா ஆகாது என்றுரைத்தார்      

செயலுக்கு கம்மம் என்று பெயர். செயலின் விளைவுக்கு விபாக என்று பெயர். விபாக தீமையை அளித்தால் கம்மா என்பது தீய செயல்கள், விபாக நன்மையை அளித்தால் கம்மா என்பது நற்செயல்கள். அதாவது நற்செயல்கள் நன்மையையும் தீய செயல்கள் தீமையையும் அளிக்கும். எனவே தீய செயல்களை தவிர்த்து நற்செயல்களை செய்யுங்கள். 

நற்செயல்கள் என்பது என்ன? எந்த செயல்கள் தமக்கும் பிறருக்கும் நன்மையை தருகிறதோ அதுவே நற்செயல். கம்மம் என்ற செயலுக்கான விளைவின் காலம் ஒரே அளவு கொண்டது இல்லை. 01. சில கம்மாக்களின் விளைவு  எப்பொழுதும் நிகழும், 02. சில கம்மாக்களின் விளைவு உடனடியாக நிகழும், 03. சில கம்மாக்களின் விளைவு வேறு ஒரு காலத்தில் நிகழும். அதாவது அவரின் வாழ்நாளுக்குள்.
வந்தவாசியில் உள்ள பொன்னூர் மலை அருகில் உள்ள சமண கோவிலுக்கு சென்றேன். அங்கு சமண சமய நூல்களை நன்கு கற்றறிந்து பட்டம் பெற்ற உபாசகர் ஒருவர் சமண சமயத்திற்கும் பௌத்தத்திற்கும் பல ஒற்றுமைகள் இருப்பது போன்று பல வேற்றுமைகளும் உள்ளது. மிக முக்கியமான வேறுபாடாக கருதுவது விபாக என்றுரைத்தார். ஒருவன் கொலை செய்துவிடுகிறான், கொலைக்கான தண்டனை பெறுவதற்குள் இறந்து போகிறான். அவனை பற்றி பௌத்தம் என்ன சொல்கிறது என்றால் அவன் என்ற சேர்மம் அழிந்து போய்விட்டது, அவன் இறந்து விட்டான் எனவே அவனது கம்மா அவனை பாதிக்காது. மரணம் என்பது தண்டனை இல்லை. அது அனைத்து உயிர்க்கும் வருபது. எனவே பௌத்தம் குற்றம் செய்து விட்டு இறந்துபோவர்களை அவரின் தீய செயல் அவரை துன்புறுத்தாது, அதாவது வாழ்நாளுக்குள் நன்மையையும் தீமையும் நிகழும், இறந்தபின் விபாக அவரை பாதிக்காது என்றுரைக்கிறது.
ஆனால் சமணத்தில் குற்றம் செய்தவன் இறந்தாலும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. உடல் அழிந்தாலும் ஆன்மா இருக்கிறது. ஆன்ம வேறு உடல் எய்திய பின் அப்பிறப்பில் விபாக நிகழும். அதாவது தீய செயலுக்கான தண்டனையை அவர் இறந்ததால் மறுபிறப்பில் அடைவார்  என்று அவர் விளக்கம் அளித்தார்.
(4/6) ஆவா அறுத்தல் தம்மம்  
பேராசையே பெரும்துன்பத்திற்க்கு காரணம். பெருஞ்செல்வந்தரும் பெறுவதில் தான் இருக்கின்றனர் தருவதில் இல்லை. இங்கே பொருளாதார அறிஞர் மாஸ்லோ அவர்களின் தேவை கோட்பாடு நினைவுக்கு வருகிறது. தேவைகள் எப்பொழுதும் முற்று பெறுவதில்லை. ஒரு தேவை நிறைவேற்றப்பட்ட பின்னர் அடுத்த தேவையை நோக்கி நகருதல் என தேவைகள் தொடர்ந்த வன்னமாக இருக்கும். அறிஞர் மாஸ்லோ அவர்களின் தேவை கோட்பாட்டில் தேவை (Need/Wants) என்ற சொல்லுக்கு பதில் தன்கா என்று மாற்றினால் அது பகவன் புத்தரின் கோட்பாட்டில் இருந்து முரண்பட்டதாக இல்லை.
       
(1/6)  வாழ்வில் தூய்மையை கடைபிடிப்பது தம்மம் 
ஆறு புலன்களை (அ) அறிவுகளை கொண்டவன் மனிதன். இந்த ஆறு புலன்களில் மூன்று புலன்கள் மட்டுமே வெளிப்படுத்துபவை. முதல் அறிவு (அ) முதல் புலன் என்ற உடல், இரண்டாவது அறிவு (அ)  இரண்டாவது புலன் என்ற நாக்கு (வாய்), ஆறாவது அறிவு (அ) ஆறாவது புலன் என்ற மனம். எனவே உடலால், உரையால், உள்ளத்தால்  சீலத்தை (ஒழுக்கத்தை) ஒழுகுதல் தம்மம். 

(2/6) வாழ்வில்  நிறைவடைவது    தம்மம்
உடலால், உரையால், உள்ளத்தால் நிறைவடைவது    தம்மம்

(2/6) நிப்பாணத்தில் வாழ்வது  தம்மம்
நிப்பாணம் என்பது பற்று அற்ற நிலை. பற்று தான் இன்பத்தையும் துன்பத்தையும் தரும். பற்றற்ற நிலை இன்பத்தையோ துன்பத்தியோ அளிக்காது. எனவே இது மறுபிறப்பை அளிக்காது. நன்மை செய்தால் நன்மையும் தீமை செய்தால் தீமையும் விளையும் என்பதனை எரியும் அனல் (The Fire Sermon) என்று விளக்குகிறார் பகவன் புத்தர்.

கண் எரியும் போது, கண்ணால் காணும் உருவம் எரிகிறது. கண்ணால் காணும் உருவம் காட்சி உணர்வை ஏற்படுத்துகிறது. கண்ணால் காணும் உருவம் எரியும் போது காட்சி உணர்வு எரிகிறது. காட்சி உணர்வு குறிப்பை பதிவிடுகிறது. காட்சி உணர்வு எரியும் போது காட்சி குறிப்புகள் எரிகிறது. காட்சி குறிப்புகள் எரியும் போது, காட்சி குறிப்பினால் எழும் இன்பம் அல்லது துன்பம் எல்லாம் எரிகிறது. எதனால் எரிகிறது என்றால் காமம், வெகுளி மயக்கம் இவற்றினால் எரிகிறது. இது போன்று ஒவ்வொரு புலன்களும் எரிகிறது என்று விளக்குகிறார் பகவன் புத்தர். 
  
தம்மல்லாதது எது 
தம்மல்லாதது எது என்பதனை அறிவர் எட்டு வகையாக பிரித்து அளித்துள்ளார். 01.  இயற்க்கைக்கு அப்பாற்பட்டதை நம்புவது தம்மம்மல்ல 02. கடவுளை நம்புவது  தம்மம்மல்ல  03.   பிரம்மத்தை அடிப்படையாக கொண்டது தம்மம்மல்ல 04. ஆன்மாவை அடிப்படையாக கொண்டது தம்மம்மல்ல 05.யாகத்தை அடிப்படையாக கொண்டது தம்மம்மல்ல 06.யூகத்தை அடிப்படையாக கொண்டது தம்மம்மல்ல 07.தம்ம நூற்களை கற்றல் தம்மம்மல்ல 08.தம்ம நூல்களில் தவறு நிகழாது என்று நம்புவது தம்மம்மல்ல

01.  இயற்க்கைக்கு அப்பாற்பட்டதை நம்புவது தம்மம்மல்ல       
இங்கு இரு வேறு கருத்துக்கள் நிலவுகிறது   01. உலகில் நிகழும் எல்லா நிகழ்வுக்கும் காரணம் இருந்தாகவேண்டும் என்பது இல்லை (பகவதா). 02.உலகில் நிகழும் எல்லா நிகழ்வுக்கும் காரணம் இருக்கிறது.  அது மனிதனால் இல்லை இயற்க்கையினால், இயற்க்கை நிகழ்வும் முன்கூட்டியே நிர்ணயிக்கப்படுகிறது   (கோசலர் மகாலி)

இவ்விரண்டு கோட்பாடுகளையும் பகவன் புத்தர் புறக்கணிக்க மூன்று நோக்கங்கள் இருக்கிறது. 01. மனிதனை பகுத்தறிவு பாதைக்கு அழைத்து செல்வது 02.உண்மையை தேடிச்செல்ல மனிதனை சுதந்திரமாக்குவது 03. மூட நம்பிக்கைகளை விட்டு விட்டு தீர விசாரித்தறியும் உணர்வை வளர்ப்பது.

மறுக்கிறார். புத்தரின் விளக்கம் எல்லா நிகழ்வுக்கும் காரணம் உள்ளது. காரணமின்றி ஏதும் நிகழ்வதில்லை. இந்த நிகழ்வுக்கு இரு கரணங்கள் உள்ளது ஒன்று மனித செயல்கள் மற்றோன்று இயற்க்கை விதியால் நிகழ்கிறது.            

02. கடவுளை நம்புவது  தம்மம்மல்ல
வெளிப்படுத்தபட்ட மதம் சொல்வது என்னவென்றால் உலகம் படைக்கப்பட்டது.  உலகத்தை படைத்தது கடவுள்.  கடவுளை யார் படைத்தது என்றால் கடவுள் தானே தோன்றினார்  என்றுரைக்கின்றனர்.  கடவுள்  ஒன்றில் இருந்து உலகத்தை படைத்தாரா? அல்லது வெறுமையில் இருந்து  உலகத்தை படைத்தாரா? இல்லாததில் இருந்து மற்றோன்றை உருவாக்க முடியாது. எனவே ஒன்றில் இருந்து மற்றோன்றை உருவாக்கினார் என்றால் கடவுளுக்கு முன்பே அப்பொருள் உள்ளது. கடவுளுக்கு முன்பே அப்பொருள் உள்ளதால் அதை படைத்தவர் கடவுள் இல்லை.

கடவுளை நம்புவது ஆபத்தானது என்றுரைக்கின்றார். காரணம்   கடவுள் நம்பிக்கை பூசையையும், பிராத்தனையையும்  உருவாக்கும். இதனை செய்ய புரோகிதர்கள் வேண்டும். தீய புத்திசாலியான புரோகிதர்கள் தங்கள் வாழ்வை வாழ்வை வளப்படுத்திக்கொள்ள மூட நம்பிக்கைகளை உருவாக்குவார்.  
03.   பிரம்மத்தை அடிப்படையாக கொண்டது தம்மம்மல்ல
உண்மைகளை நிரூபிக்க வேண்டும். உண்மையை நிரூபிக்க கபிலரின் சாங்கிய தத்துவத்தின் படி இருவழிகள் உள்ளது.  ஒன்று புலன்களுக்கு புலப்படல் மற்றோன்று அனுமானத்திற்கு அகப்பட்டால். அனுமானத்திற்கு அகப்பட்டால் என்றால் காரணத்தைக் கொண்டு காரியத்தை அறிதல் (அ) காரியத்தைக் கொண்டு காரணத்தை  அறிதல் (அ) ஒப்பீட்டின் மூலம் அறிதல்  சாங்கிய தத்துவத்தின் படி பிரமத்தை அறிய முடியவில்லை.  எனவே பிரமம் ஒன்று இல்லை என்றுரைக்கிரார் பகவன் புத்தர்.

கண்களுக்கு புலப்பட வேண்டும் என்றால் மின்சாரம் கண்களுக்கு புலப்படவில்லை. எனவே மின்சாரம் இல்லை என்று சொல்லிவிட முடியுமா? சாங்கிய தத்துவத்தின் முதல் விதி படி புலன்களுக்கு (கண்ணுக்கு) புலப்படவில்லை ஆனால் இரண்டாவது விதி படி அனுமானத்திற்கு அகப்படுகிறது.  மின் ஆற்றல் மிக இன்றியமையாத ஆற்றலாக நமக்கு உள்ளது. அதனை வெப்ப ஆற்றலாகவும், ஒளி ஆற்றலாகவும், ஒலி ஆற்றலாகவும் பயன்படுத்திக்கொண்டு வருகிறோம்.     

இதுவரை வேதங்களை நன்கு கற்றுணர்ந்த மாணவர்கள் யாரும் பிரம்மத்தை கண்டதில்லை. அவர்களின் ஆசிரியர்கள் யாரும் பிரம்மத்தை கண்டதில்லை, ஏழு தலைமுறையில் ஒருவர் கூட கண்டதில்லை, ரிஷிகள் யாரும் கண்டதில்லை. யாரும் கண்டறியாத என்று இருப்பதாக ஏறக்க முடியாது என்றுரைக்கிறார் பகவன் புத்தர்.   

இவ்வாறு சொல்வது எப்படி இருக்கிறது என்றால் ஒருவன் தான் அழகிய பெண் மீது காதல் கொண்டு இருப்பதாக  சொல்கிறான். அவனிடம் அப்பெண்ணின் பெயர் என்ன என்றால் தெரியவில்லை என்கிறாரன். அவள் நிறம் என்ன என்றால் தெரியவில்லை என்கிறாரன்.  அவள் எங்கிருக்கிறாள் என்றால் தெரியவில்லை என்கிறாரன்.  அவளை பற்றி எதுவும் தெரியாது என்கிறாரன். இவனை என்ன சொல்வது?   கண்டுணராத பெண் மீது காதல் கொண்டது போன்று உள்ளது பிரமத்தை பற்றிய பேசசு என்றுரைக்கிறார் பகவன் புத்தர்.

04. ஆன்மாவை அடிப்படையாக கொண்டது தம்மம்மல்ல 
ஆன்மா உண்டு என்றே பெரும்பாலான மாதங்கள் கூறுகின்றது. பௌத்தம் மட்டும் ஏன் ஆன்மாவை மறுக்கிறது. உண்மை என்றால் அது நிருபிக்கப்பட்ட வேண்டும். பௌத்தம் அனிச்சா (நிலையாமை) கோட்பாட்டை கொண்டுள்ளது (எல்லாம் நிலையற்றவை).

ஆன்மாவை பற்றி வெளிப்படுத்தபட்ட மாதத்திலேயே இரு வேறு கருத்துக்கள் உள்ளது. ஒன்று ஒரே கருத்து உடையவை மற்றோன்று பல்வேறு கருத்துக்கள் கொண்டவை.

ஒரே கருத்து உடையவை 01. ஆன்மா என்பது உயிர்/ உடல் தோன்றும் போது உடலில் உட் புகுகிறது. உடலில் உயிர் இருக்கும் வரை உடலில் தங்கியிருக்கிறது. உடல் மரணம் அடையும் போது உடலை விட்டு ஆன்மா சென்றுவிடுகிறது. அது வேறு ஒரு உடலுக்கு உட்புக காத்துக்கொண்டு இருக்கிறது. அதாவது ஆன்மா அழிவற்றது/ நிலையானது   

பல்வேறு கருத்துக்கள் 01. ஆன்மாவிற்கு உருவம் உண்டு/ இல்லை  02.   ஆன்மா என்பது உணர்வு/ உணர்வல்ல  03.   ஆன்மா என்பது புலனறிவுடையது/ புலனறிவற்றது  04.  உடல் மரணம் அடையும் போது ஆன்மா துன்பம் அடைகிறது/ அடைவதில்லை  

பகவன் புத்தர் தன்னுணர்வை தான் ஆன்மா என்று கருதுகின்றனர் என்றுரைக்கிறார். இதனை நாமரூபம் என்ற கோட்பாட்டால் விளக்குகிறார். நாம ரூபம் என்றால் புலன் அறிவு உள்ள உயிர்கள். நாம ரூபம் என்பதனை Closed System என்று சொல்லலாம். பல்வேறு கந்தங்களை அதாவது திடப்பொருள், திரவப்பொருள் மற்றும் வாயு பொருள்கள் அனைத்தையும் போர்வையாக போர்த்து தோல் இருக்கிறது. இந்த ஆறு புலன் அறிவு இந்த நான்கு கந்தங்களால் ஆனது. இதனை நாம ரூபம் என்கிறது.  இந்த புலன்களின் தன்னுணர்வை தான் ஆன்மா என்றுரைக்கின்றனர்.      

05.யாகத்தை அடிப்படையாக கொண்டது தம்மம்மல்ல
யாகங்களை அடிப்படையாக கொண்டது வைதிகம்.  யாகங்கள் உயர்வனை இல்லை. ஏனெனில்   யாகத்தில் மது அருந்தப்படுகிறது, உயிரினங்களை பாலியிடப்படுகிறது, கேளிக்கைகளில்  ஈடுபடப்படுகிறது, யாகங்கள் நடத்தப்படும் இடங்களை சுற்றி தூண்கள் நடப்பட்ட ஏராளமான மரங்கள் அழிக்கப்படுகிறது, ஏராளமான புள்களை அறுத்து யாகம் நடத்தப்படும் இடங்களை சுற்றி நிரப்பப்படுகிறது, பணியாட்கள் அடித்து புன்புறுத்தப்படுகின்றனர்.

யாகங்கள் செய்ய விரும்பினால் அது குலகுரு என்ற பிராமணர் மன்னர் மகாவிதேர்க்கு செய்ததை போன்று செய்ய வேண்டும் என்று பகவன் புத்தர் (கூடதண்டர், உதயினர், உஜ்ஜயர்) என்ற மூன்று பிராமணர்களுக்கு விளக்கமளித்தார்.  
யாகங்கள் செய்ய மேலே சொன்னவைகளை தவிர்த்து  பால், நெய், வெண்ணை, எண்ணெய், தேன், சக்கரை இவற்றைக்கொண்டு யாகம் நடத்தப்படவேண்டும். மக்கள் அனைவரையும் அழைக்கப்படவேண்டும், அதில் நற்செயல்களை செய்தவர்களை அழைத்து அவர்களை பெருமை படுத்தவேண்டும். அறநிலையங்களை அமைத்து அறச்செயல்களை செய்யவேண்டும்          

06.யூகத்தை அடிப்படையாக கொண்டது தம்மம்மல்ல
அறிவு என்பது இறுதியானது இல்லை. அது எப்பொழுதும் அறிய வேண்டடியுள்ளது. அனைத்தையும் அறிந்தவர் உலகில் இல்லை. பகவன் புத்தரும் தன்னை அனைத்தையும் அறிந்தவர் என்று கூறிக்கொள்ளவில்லை. கற்பனையில்/ யூகத்தில் வாழ்வது தம்மம் அல்ல.    

07.தம்ம நூற்களை கற்றல் தம்மம்மல்ல
பிராமணர்கள்  நூல் அறிவுக்கு மேல் ஒன்றுமில்லை என்று நினைக்கிறார்கள்.  அதாவது படிப்பது, மனப்பாடம் செய்வது ஒப்பிப்பது .   பாபா சாகிப் அறிவை பற்றி பேசும் பொழுது அறிஞர் டிலோ வை குறிப்பிடுகிறார். அறிவென்பது வயது முதிர்ச்சியை போன்று ஒருவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவரை வந்தடையும் பொருளல்ல. அறிவு வேண்டுமெனில் முதலில் ஆர்வம் ஏற்பட்ட வேண்டும் பின்பு ஐயங்களை போக்கிக்கொள்ளவேண்டும். பகவன் புத்தர் அறிவை பற்றி பேசும் பொழுது அதனை வாழ்வில் நடைமுறைப்படுத்த வெண்டுமென்கிறார்.  அறிவு ஒழுக்கத்துடன் இணைந்து இருக்கவேண்டும்.  ஒழுக்கமில்லாத அறிவு ஆபத்தானது. 

1000 செய்யுட்களை அறிந்து இருப்பதை விட ஒரே ஒரு செய்யுளை அறிந்து உணர்ந்து அதன்படி நடப்பதே தம்மம் என்றுரைக்கிறார்.  தம்ம நூல்களை படிப்பது தம்மமல்ல அதன்படி நடப்பதே தம்மம்.

பதிசேனர் என்ற பிக்கு வயதில் முதிந்தவர், மந்த புத்தியுள்ளவர். அவரை  பலர் கேலியும் கிண்டலும் செய்துகொண்டறிந்தனர். ஒரு முறை பகவன் புத்தர் அவரை அழைத்து அவர்க்கும் ஒரு செய்யுளை விளக்கினார்.
நகாப்பவன் எவனோ
நினைவை கட்டுக்குள் நிறுத்துபவன் எவனோ
தன்னுடலால் துன்பம் ஏழைக்காதவன் எவனோ ..
ஒருமுறை பதிசேனரை பகவன் புத்தர் பிக்குணிகளுக்கு போதிக்க அனுப்பினார். இவர் வருவதை அறிந்த பிக்குணிகள் அவரை நன்கு குழப்ப முடிவெடுத்து இருந்தனர். அவர்களின் செயல்கள் அத்தனையும் தோற்றுப்போனது. பதிசேனர் ஒரே ஒரு செய்யுள் அறிந்த பிக்கு என அறியப்பட்டார்.   பதிசேனர் பொருளறிந்து அதனை தம் வாழ்வில் கடைபிடித்து வந்ததால், பகவன் புத்தர் தம் தானம் ஏற்கும் பாத்திரத்தை அவருக்கு அளித்தார். ஒரு முறை பகவன் புத்தரை விருந்திற்கு அளித்தார் மன்னர், அதனை ஏற்று புத்திசேனரை தன்னுடன் அழைத்து சென்றார். வாயில் காப்பாளன் பதிசேனரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. பகவன் புத்தரை மட்டுமே அனுமதித்தனர். பகவன் புத்தர் உணவு ஏற்க சென்ற போழுது, புத்திசேனரிடம் சென்று அவரின் கைகளை கழுவினார். புத்தரின் செயலை கண்டு அதிந்த மன்னரும் பிறரும் வியந்து கேட்டது ஒரே ஒரு குறள் அறிந்த ஒருவரின் கைகளை ஏன் நீங்கள் கழுவுகின்றீர் என்றனர். ஒரு குறள் என்பது முக்கியமல்ல அதனை வாழ்வில் கடைபிடிப்பதே தம்மம் என்றுரைத்தார் புத்தர். 

 08.தம்ம நூல்களில் தவறு நிகழாது என்று நம்புவது தம்மம்மல்ல
த்விஜ்ஜ சுத்தத்தில் வேதங்கள் நீர் இல்லாத பாலைவனம். பாதையில்லா பெருவனம், உண்மையில்  வேதங்கள் பூரண அழிவுகள், அறிவு தாகமும் ஒழுக்கமும் உடைய எந்த மனிதனும் தன் தாக்கத்தை தணிக்க வேதங்களை நாடி செல்ல மாட்டான்.